Tuesday, May 24, 2011

நந்தவனம் பூத்திருக்க,
நங்கையவள் தனித்திருக்க,
இரண்டுமே ஒன்றாக,
சேர்ந்ததே நன்றாக,
வெண்மணியே கருவாக,
வெட்கமே உருவாக,
மாதமே பத்தாம்,
வந்ததோ முத்தாம்,
அவளாலே பந்தம்,
கையளவே சொந்தம்,
அறியாதவன் பித்தன்,
அறிந்தவனே சித்தன் !

No comments:

Post a Comment