Thursday, February 24, 2011

என்னவளும் விண்ணவள் தான்,
அகவையில் சின்னவள் தான்,
தேய்ந்தாலும், வளர்ந்தாலும்,
என் மனை சார்ந்தாலும்,
கடல் கடந்து இருந்தாலும்,
கங்கை நதி மறவாதவள்,
கடலும் அவளை தழுவும்,
முத்தும் அவள் முன் கரையும்,
பகலினில் காதலன் மனதில்,
இரவினில் காதலர் நிலவாவாள்,
விண்ணை தாண்டுமா நிலா ?
தரையில் இறங்கி நடக்குமா ?
தாண்டும்..நடக்கும்...
கொண்டவன் அழைத்தால் !

No comments:

Post a Comment