Thursday, February 17, 2011

கட்டிலில் புரண்டு, கவிதையில் துவண்டு,
காதலியை காண கடலோரம் சென்றான்,
மென் மாலை நேர தென்றலில் நடந்தான்,
தொலைந்த சுவடுகள், அத்தனை இருக்க,
அவள் பிம்பம் மட்டும் கண்களில் மிதக்க,
அலை கடல் அழிக்க வேண்டி, பாய்ந்து வர,
அது பின் சென்றதும், மெல்ல பார்த்தான்,
தினமும் தோய்ந்தவள், மெல்ல சிரித்தாள்,
வராமலே வந்தாள், வந்ததும் வென்றாள்,
தோற்றாலும் புன்னகை அவன் கண்ணிலா,
அதற்கும் காரணம் அந்த வெண்ணிலா !

No comments:

Post a Comment