Tuesday, February 1, 2011

வேங்கையவன் விளையாட,
வெட்கத்தோடு அவள் உறவாட,
வீர விளையாட்டும் இது அல்ல,
வேட்டையாடும் நேரமும் இது அல்ல,
கட்டிலுக்கும் வந்தது ஒரு பந்தம்,
இருவருக்கும் மட்டுமே அது சொந்தம்,
வெற்றி தோல்வி கருதாது விளையாடு,
உன் விளையாட்டுக்கு அவள் படும் பாடு,
பத்து மாதம் அவள் மட்டுமே அழகு,
உன் உணர்ச்சிகளை கட்டு படுத்த பழகு,
அந்த நேரம், அந்த ஒரு நிமிடம்,
போன உயிர் அவளுக்கு வந்ததடா,
கண் முன்னே விஸ்வரூபம் எடுத்து நின்றதடா,
பிறந்தது கண்ணன் என்றால் எட்டி உதைப்பான்,
பிறந்தது ராதை எனில் அவனே கட்டி அணைப்பான்!

No comments:

Post a Comment